இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள்
எமது சங்கத்தின் "உயர்த்தும் கரங்கள்" செயற்திட்டத்தினூடாக, "புதிய மகாஜனன் இளைஞர்கள் ரொரன்டோ கனடா" அமைப்பின் நிதியில் இளவாலை மற்றும் கீரிமலை பகுதிகளை சேர்ந்த 75 மாணவர்களுக்கு புத்தகப்பைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் புதிய வங்கி கணக்கும் ஆரம்பிக்கபட்டு குறிப்பிட்ட நிதி வைப்பிலிட்டு கடந்த ஆண்டு ஆரம்பிக்கபட்ட இச்செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் 500/= பணம் வங்கியில் வைப்பிலபட்டு தலா 3000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன! தொடர்ந்தும் ஆண்டுதோறும் இம்மாணவர்களுக்கு அவ் அமைப்பினூடாக நிதி வைப்பிலபடவுள்ளதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு துறையின் சிறப்பு பெறுபேறுகளுக்கு அமைய நிதிவைப்பிலபடவுள்ளது!
இதன் தொடர்சியாக மேலும் கொல்லங்கலட்டி, பன்னாலை பகுதிகளைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கும், தெல்லிப்பழை மாவிட்டபுரம் பகுதிகளை சேர்ந்த 85 மாணவர்களுக்கும். கடந்த ஆண்டுபோல கற்றல் உபகரணங்களும் சேமிப்பு நிதியும் வழங்கபடவுள்ளது!
இத்தகய உன்னத செயற்திட்டத்தில் எம்முடன் இணைந்த மகாஜனன்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தென்தமிழ்தேசம், மட்டகளப்பு மாவட்டத்தில், 70 மாணவர்களுக்கு தலா
3000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது!
புதிய கல்வியாண்டுக்கு செல்லும் வடக்கு கிழக்கு மாகணங்களைச் சேர்ந்த தேவையுடைய 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட செயற்திட்டத்தின்கீழ், கிழக்கு மாகாணம் மட்டகளப்பு மாவட்டத்தில் தலா 3000/= பெறுமதியுடைய கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது!
ஆண்டுதோறும் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களை சேர்ந்த 1000 மாணவர்களுக்கு , புதிய கல்வியாண்டு ஆரம்பிக்க முன்னதாக கற்றல் உபகரணம் வழங்கும் விசேட திட்டம் முன்னெடுத்துவருகிறோம்! சங்கத்தின் 10வது ஆண்டில் இம்முறை மலையக மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது!
இன்றைய தினம் ( 06.05.2023) 60 பேருக்கு மதிய உணவுப் பொதி வழங்கப்பட்டது!
எமது சங்க நீண்டகால பெயர் குறிப்பிட விரும்பாத நலன் விரும்பி ஒருவர் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு வழங்கிய நிதியில் யாசகம் செய்வோர்கு மதிய உணவுப் போதிகள் வழங்கப்பட்டது
தனது பிறந்த தினத்தில் இவ் நல்ல கருமத்தில் எம்மூடாக இணைந்த சங்க நலன்விரும்பிக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்ளவதோடு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறிக்கோள்கின்றோம் ..
தெல்லிப்பழை கிராமத்தைச்சேர்ந்த 85 மாணவர்களுக்கு 3வது முறையாக இந்த ஆண்டும் தலா 3000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு அவர்களுக்காக உருவாக்கபட்ட வங்கி கணக்கில் ஒருதொகை நிதியும் வைப்பிலடப்பட்டது!
தெல்லிப்பழை பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகாஜனக்கல்லூரியின் முன்னாள் கணித ஆசான் அமரர் த.பூ முருகையா அவர்களை நினைவுகூர்ந்து தொடர்சியாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது! இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்!
2021ம் ஆண்டுதொடக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்சிதிட்டத்தின் தொடர்சியாக இம்முறையும் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யபட்டிருந்தது! இந்த ஆண்டுக்கான செயற்திட்டங்களில் இதுவரை இளவாலை, கீரிமலை மற்றும் சிறுவிளான், பன்னாலை வித்தகபுரம்,மாவிட்டபுரம், பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் அவர்களுடைய வங்கிகணக்கிற்கான கற்றல் ஊக்குவிப்பு தொகை வைப்பிலிடலினை தொடர்ந்து மூன்றாவது நிகழ்வாக தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டது!
இச் செயற்திட்டத்திற்கு புலம்பெயர்ந்து கனடா ரொரன்டோ நகரில் வசித்துவரும் மகாஜனன்களின் 'புதிய மகாஜனன் ரொரன்டோ கனடா' அமைப்பினர் நிதிநன்கொடை வழங்கியிருந்தனர்! அவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றிகள்!!!
அமரர் செல்லம்மா உலகநாதன் அவர்களின் 10வது நினைவுநாளில் பெண்தலைமத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியும் இல்லச் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு, அமரர் செல்லம்மா உலகநாதன் அவர்களின் 10வது ஆண்டு நினைவை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் வழங்கிய ரூபா 100,000/= நிதியிலிருந்து, கிளிநொச்சி விசேடதேவையுடையோர் சிறுவர் இல்லத்திற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டதுடன், மிகப்பொருளாதார நலிவான சூழில்வாழ்ந்துவரும் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக 25 கோழிக்குஞ்சுகள் அவற்றுக்கான தீனிகள் மற்றும் ஆடு என்பன வழங்கிவைக்கப்பட்டது!
தமது தாயாரின் நினைவுநாளில் இவ் உன்னதப்பணியில் இணைந்த திரு.உ.சந்திரகுமாரன் அவர்களுக்கு சங்கம் சார்பான நன்றிகளை தெரிவிப்பதுடன் அமர்ரின் ஆத்மா சாந்திபெறவும் பிரார்த்திக்கிறோம்!!!
செல்வி ரிஜா அவர்களின் 2வது பிறந்தநாளையடுத்து 35 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு, புலம்பெயர்தேசத்தில் வாழும் அன்பர்கள் தமது செல்லக்குழந்தை ரிஜா அவர்களின் 2வது பிறந்தநாளையடுத்து வழங்கிய ரூபா 100,000/= நிதியிலிருந்து தேவையுடைய பொருளாதார பின்தங்கலான இருபாலை பகுதியைச்சேர்ந்த 35 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், பெண்தலமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியும் வழங்கபடவுள்ளது!
தமது மகளின் 2வது பிறந்தநாளையடுத்து இவ் உன்னதப்பணியில் இணைந்த அன்பர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், செல்வி ரிஜா அவர்களுக்கு சங்கம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
செல்வி ரிஜா அவர்களின் 2வது பிறந்தநாளையடுத்து பெண்தலமைத்துக்குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு, புலம்பெயர்தேசத்தில் வாழும் அன்பர்கள் தமது செல்லக்குழந்தை ரிஜா அவர்களின் 2வது பிறந்தநாளையடுத்து வழங்கிய ரூபா 100,000/= நிதியிலிருந்து தேவையுடைய பொருளாதார பின்தங்கலான இருபாலை பகுதியைச்சேர்ந்த 35 மாணவர்களுக்கு ஏலவே கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், மாவிட்டபுலரம் நல்லிணக்கபுரம் பகுதியில் வசித்துவரும் நலிவான குடும்பசூழலில் வாழ்ந்துவரும் பெண்தலமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும், கோழிக்குஞ்சுகளும் வழங்கிவைக்கப்பட்டது!
தமது மகளின் 2வது பிறந்தநாளையடுத்து இவ் உன்னதப்பணியில் இணைந்த அன்பர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், செல்வி ரிஜா அவர்களுக்கு சங்கம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
அமரர் வயித்திலிங்கம் தியாகராசா நினைவாக ரூபா 155, 000/= செலவில் இன்று பல்வேறு செயற்திட்டங்கள்!
அமரர் வயித்திலிங்கம் தியாகராசா அவர்களின் 21 ம் ஆண்டு நினைவாக அவர்களின் குடும்பத்தினர் வழங்கிய ரூபா 155,000/= நிதியிலிருந்து மூன்றுவகையான உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது!
கிளிநொச்சி விசேடதேவையுடையோர் இல்லத்தினை சேர்ந்த இல்ல சிறார்களிறார்களிற்கு மூன்று நேர சிறப்புணவு வழங்கப்பட்டது!
பொருளாதாரம் நலிவான மற்றும் பெண் தலமைத்துவ குடும்பங்கள் 15 தெரிவுசெய்யப்பட்டு 5000.00 பெறுமதியான உலர் உணவுப்போதிகள் வழங்கப்பட்டது
மிக பின்தங்கியபிரதேசத்தில் வாழும் தேவையுடைய குடும்பங்களுக்கு மதிய உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது!
தமது குடும்பத் தலைவரின் நினைவுநாளில் இவ் செயற்திட்டங்களில் ஈடுபட்ட தியாகராசா திவ்யராஜன் மற்றும் குடும்பத்தினர்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் அமர ரது ஆத்மா சாந்தியடைய இறைவனையும் பிரார்த்திக்கின்றோம்!!!
செல்வன் அ.ஆஜீஷ் அவர்களின் 11வது பிறந்தநாளைமுன்னிட்டு பொருளாதார நலிவான குடும்பங்களுக்கு 5000/= பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசியும் அன்பர்கள் தமது மகன் செல்வன் ஆஜீஷ் அவர்களின் 11வது பிறந்தநாளையடுத்து வழங்கிய நிதியிலிருந்து பொருளாதார நலிவான 6 குடும்பங்களுக்கு தலா 5000/= பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கபட்டது!
தமது குழந்தையின் பிறந்தநாளையடுத்து இவ் உன்னதப்பணியில் இணைந்த அன்பர்களுக்கு சங்கம் சார்பான நன்றிகளையும், செல்வன் ஆஜீஷ் அவர்களுக்கு சங்கம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
செல்வி சஸ்மிதா பிரணவன் அவர்களின் 1வது பிறந்தநாளையடுத்து, பிறப்பிலிருந்து உடல்நிலை சீரற்ற குழந்தைக்கு ரூபா 25000/= பெறுமதியான உதவி!
இன்றைய தினம் பிறந்த நாளைக்காணும் எமது சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் திரு.பிரணவன் அவர்களின் மகள் செல்வி சஸ்மிதா அவர்களது பிறந்தநாளையடுத்து, திரு.பிரணவன் அவர்கள் வழங்கிய ரூபா 25000/= நிதியிலிருந்து, தந்தை பிரிந்து மிகவும் நலிவான குடும்ப சூழலில் தாயாரின் அரவணைப்பில் 6 பிள்ளைகளோடு வாழும் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த, பிறப்பிலிருந்து உடல் இயங்கா நிலையில் உள்ள குழந்தைக்கு தேவையான சுகாதார, மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டது!
தமது மகளின் பிறந்தநாளில் எமது சங்கத்தினூடாக இவ் உன்னதப்பணியில் இணைந்த திரு.பிரணவன் அவர்களது குடும்பத்திற்கு சங்கம் சார்பான நன்றிகளும் செல்வி சஸ்மிதா குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
அமரர் கணேசரத்தினம் அமராவதி அவர்களின் நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதியிலிருந்து கட்டுவன் பகுதியைச்சேர்ந்த 15 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது!
தமது தாயாரின் நினைவாக இவ் உன்னதப்பணியில் இணைந்த அவரது குடும்பத்தினருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், அமரரின் ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திக்கிறோம்!!!
திவியறாஜன் தேனுஜன் குழந்தையின் பிறந்த தினமான இன்றைய தினம்( 11.07.2023) 155000.00 செலவில் பல்வேறு உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது!
பொருளாதாரம் நலிவான குடும்பங்களை சேர்தவர்கள் மற்றும் பெண்தலமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 10 குடும்பங்களிற்கு தலா 5000.00 பெறுமதியான உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது!
யாசகம் செய்வோர் மற்றும் பொருளாதாரம் நலிவான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 80 பேருக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது!
கிளிநொச்சி விசேட தேவையுடையோர் இல்லத்தைச் சேர்ந்த சிறார்களிற்கு மூன்றுநேர சிறப்பு உணவு வழங்கப்பட்டது!
அண்மையில் தீக்கிரையாகி தங்கிமிடம் ,பொருள்கள் முழுவதும் எரிந்த ஒரு வறிய குடும்பத்திற்கு உடனடி தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் உலர்உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது!
தமது குழந்தையின் பிறந்த தினமான இன்றைய தினம் இவ்வாறு பல செயற்திட்டங்களில் எம்மோடு இணைந்துகொண்ட திரு.திருமதி. திவியறாஜன் குடும்பத்தினர்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு தேனுஜன் குழந்தைக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் .
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.