எமது சங்கத்தின் "உயர்த்தும் கரங்கள்" செயற்திட்டத்தினூடாக, "புதிய மகாஜனன் இளைஞர்கள் ரொரன்டோ கனடா" அமைப்பின் நிதியில் இளவாலை மற்றும் கீரிமலை பகுதிகளை சேர்ந்த 75 மாணவர்களுக்கு புத்தகப்பைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் புதிய வங்கி கணக்கும் ஆரம்பிக்கபட்டு குறிப்பிட்ட நிதி வைப்பிலிட்டு கடந்த ஆண்டு ஆரம்பிக்கபட்ட இச்செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் 500/= பணம் வங்கியில் வைப்பிலபட்டு தலா 3000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன! தொடர்ந்தும் ஆண்டுதோறும் இம்மாணவர்களுக்கு அவ் அமைப்பினூடாக நிதி வைப்பிலபடவுள்ளதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு துறையின் சிறப்பு பெறுபேறுகளுக்கு அமைய நிதிவைப்பிலபடவுள்ளது!
இதன் தொடர்சியாக மேலும் கொல்லங்கலட்டி, பன்னாலை பகுதிகளைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கும், தெல்லிப்பழை மாவிட்டபுரம் பகுதிகளை சேர்ந்த 85 மாணவர்களுக்கும். கடந்த ஆண்டுபோல கற்றல் உபகரணங்களும் சேமிப்பு நிதியும் வழங்கபடவுள்ளது!
இத்தகய உன்னத செயற்திட்டத்தில் எம்முடன் இணைந்த மகாஜனன்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.