தெல்லிப்பழை கிராமத்தைச்சேர்ந்த 85 மாணவர்களுக்கு 3வது முறையாக இந்த ஆண்டும் தலா 3000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு அவர்களுக்காக உருவாக்கபட்ட வங்கி கணக்கில் ஒருதொகை நிதியும் வைப்பிலடப்பட்டது!
தெல்லிப்பழை பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகாஜனக்கல்லூரியின் முன்னாள் கணித ஆசான் அமரர் த.பூ முருகையா அவர்களை நினைவுகூர்ந்து தொடர்சியாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது! இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்!
2021ம் ஆண்டுதொடக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்சிதிட்டத்தின் தொடர்சியாக இம்முறையும் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யபட்டிருந்தது! இந்த ஆண்டுக்கான செயற்திட்டங்களில் இதுவரை இளவாலை, கீரிமலை மற்றும் சிறுவிளான், பன்னாலை வித்தகபுரம்,மாவிட்டபுரம், பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் அவர்களுடைய வங்கிகணக்கிற்கான கற்றல் ஊக்குவிப்பு தொகை வைப்பிலிடலினை தொடர்ந்து மூன்றாவது நிகழ்வாக தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டது!
இச் செயற்திட்டத்திற்கு புலம்பெயர்ந்து கனடா ரொரன்டோ நகரில் வசித்துவரும் மகாஜனன்களின் 'புதிய மகாஜனன் ரொரன்டோ கனடா' அமைப்பினர் நிதிநன்கொடை வழங்கியிருந்தனர்! அவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றிகள்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.