எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்குழுவிற்கு றோயல் கல்லூரியின் 1982 A/L மாணவ நண்பர்கள் வழங்கிய 40,000/= நிதியி்ல் இருந்து யாழ் கல்லூண்டாய் பகுதியில் அமைந்த வீட்டுத்திட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தில் இடைத்தங்கலாக இடம்பெயர்ந்திருக்கும் குடும்பங்களில் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட 40 குடும்பங்களுக்கு நுளம்புவலைகள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது! தற்போது வெள்ள நிலமை ஓரளவு குறைந்துள்ள போதும் அடுத்து தேங்கிய நீர்களில் இருந்து நுளம்பு பெருக்கம் டெங்கு போன்ற அபாயநிலமைமைகளை கருத்தில் கொண்டே இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!
இதற்கான நிதியுதவியினை வழங்கிய றோயல்கல்லூரியின் 1982 A/L பழையமாணவர்களுக்கு எமது மகத்தான நன்றிகளை கூறுவதுடன், இந்த நிதி எமக்கு கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியர் வரகுணன் (IMHO கனடா) அவர்களுக்கும் எமது சங்கம் சார்பான நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.