COVID-19 தொற்று காரணமாக புரம்பெயர் தேசத்தில் உயிரிழந்த அமரர் உலகநாதன், மற்றும் அமரர் சிவானந்தன் ஆகியோர் வழங்கிய நிதி பங்களிப்பில் இன்றைய தினம் பலாலிவடக்கு பகுதியில் தனிமைபடுத்தபட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 60 பேருக்கான மதிய உணவு கிராமசேவையாளருக்கு ஒப்படைக்கபட்டு விநியோகிக்கப்பட்டதுடன் இளவாலை பகுதியில் தனிமைப்படுத்தபட்ட குடும்பம் ஒன்றிற்கும், மற்றும் காட்டு அந்தோனியார் கோவில் பகுதியை சேர்ந்த தேவையுடைய 15 குடும்பங்களுக்குமாக சமைத்த மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது!
இதற்கான நிதியைவழங்கிய அமரர்களின் குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவிப்பதுடன் அமரர் சிவானந்தன் அமரர் உலகநாதன் ஆகியோரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறோம்! இவர்களின் மூலமாக கடந்த COVID-19 தொற்று உயர் காலத்திலும் விசேட உணவுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.