இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள்
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்தினூடாக, அமரர் பாக்கியம் சின்னத்துரை அவர்களது 24வது நினைவு ஆண்டினை முன்னிட்டு அவரது பிள்ளைகளான திரு.ஐங்கரன் சின்னத்துரை, மற்றும் புலம்பெயர்ந்து UKல் வசிக்கும் அவரது மகள் திருமதி.சாந்தி அவர்களால் வழங்கப்பட்ட நிதியில், கருவி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பரிந்துரைக்கு அமைய முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கால்கள் இயங்குநிலையிழந்த ஒருவருக்கு அவரது அன்றாட செயற்பாடுகளுக்காக சக்கரநாற்காலி ரூபா 15000/= செலவில் வழங்கிவைக்கப்பட்டது!
தமது தாயாரின் நினைவு நாளை புனிதபடுத்தி இருக்கும் அவரது மகள் சாந்தி அவர்களுக்கும், மகன் ஜங்கரன் அவர்களுக்கும் எமது சங்கம் சார்பான நன்றிகள்! இவர் தனது முயற்சியில் எமது சங்கத்திற்கு பலதரபட்ட உதவித்திட்டங்களுக்கான நிதியை திரட்டிதருபவர் என்பதும் குறிப்பிடதக்கது! நீண்டகாலம் நோய் நொடியின்றி தாயாரின் ஆசிகளோடு வாழ பிரார்த்தித்து நிற்கிறோம்!
புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்துவரும் ஸ்ரீஸ்கந்தராசா தம்பதிகளின் புதல்வன் பிரணவன் அவர்களின் பிறந்த நட்சத்திரத்தினையடுத்து எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்குழுவிற்கு வழங்கிய நிதியில், பொருளாதார நலிவான சூழலில் வாழ்ந்துவரும் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது!
தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு மகனது பிறந்த நட்சத்திரநாளில் பல்வேறு உதவிகளை முன்னெடுக்க முன்வந்துள்ள, ஸ்ரீஸ்கந்தராசா குடும்பத்தினருக்கு எமது சங்கம் சார்பன நற்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!!!
லண்டன் நாட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடும் மோகன் அர்ச்சனா அவர்கள் வழங்கிய ரூபா 50,000/= நிதியில் மிகவும் நலிவான பொருளாதார சூழலில் இரண்டு பெண்பிள்ளைகளோடு, அன்றாட கூலி தொழில் உழைப்பில், வாழ்ந்துவரும் குடும்பம் ஒன்றிற்கு நீண்டதூரம் சென்று குடிநீர்பெறும் நிலமையை கருத்தில் கொண்டு குழாய்கிணறு அமைத்து குடிநீர்வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது!
தனது பிறந்தநாளில் இத்தகைய உன்னத பணியில் இணைந்த மோகன் அர்ச்சனா அவர்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்தின்மூலம், புலம்பெயர்ந்து லண்டனில் வசித்துவரும் திருமதி துரைராஜா சுமதி அவர்கள் வழங்கிய நிதியில் இருந்து 'கருவி' மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கண்பார்வை இழந்த 10 பேருக்கான வெள்ளை பிரம்புகளும், கால்கள் வலுவிழந்த 4 பேருக்கு பிடி ஊன்றுகோல்களும் வழங்கி வைக்கப்பட்டது!
இத்திட்டத்தில் எம்மோடு இணைந்த புலம்பெயர் உறவான திருமதி துரைராஜா சுமதி அவர்களுக்கு சங்கம் சார்பான நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறோம்!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்தின் கீழ், பொருளாதார நலிவான சூழலில் இரு பெண்பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் குடும்பம் ஒன்றிற்கு அடிப்படைச் சுகாதார தேவையான மலசலகூடம் ரூபா 125000/= செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டது!
இதற்கான நிதியினை லண்டன் நகரில் புலம்பெயர்ந்துவாழும் திருமதி துரைராஜா சுமதி அவர்கள் வழங்கியிருந்தார்! அவருக்கு எமது சங்கம் சார்பான மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!!!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு கிடைத்த வேண்டுகோளின் பிரகாரம், 5 பிள்ளைகளோடு மிகவும் நலிவான பொருளாதார சூழலில் பிறிதொரு வீட்டில் வாழ்ந்துவரும் பெண்தலமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு பிரதேச செயலகத்தின் மூலம் காணி வழங்கப்பட்ட நிலையில் வீட்டுத்திட்டம் கிடைக்கும் வரை தற்காலிக வீடு அமைப்பதற்கு தேவையான 10 சீட்கள், 6 தூண்கள் என ரூபா 40,000/= பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டன!
இதற்கான நிதியினை (40,000/=) எமது கிராமத்தைச் சேர்ந்த தற்போது புலம்பெயர்ந்து வசித்துவரும் திரு.பத்மனாதன் நல்லையா அவர்கள் வழங்கியிருந்தார்! அவருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!!!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்தின்கீழ், போரினால் கால் ஒன்றினை இழந்து பிள்ளைகளுடன் மிகவும் நலிவான பொருளாதார சூழலில் வாழ்ந்துவரும் (முன்னாள் போராளி) பெண்தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக ரூபா 52,000/= செலவில் தையல் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது!
இதற்கான நிதியினை புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் (முள்ளானை இளவாலையைச் சேர்ந்த) பெயர் குறிப்பிட விரும்பாத பொறியியலாளர் ஒருவர் வழங்கியிருந்தார்! அவருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!!!
எமது சங்கத்தின்'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு இளவாலை றோமன் க.த ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்ற 1972,1973.1974 ஆண்டு மாணவராக இருந்து தற்போது புலம்பெயர் தேசங்களில் வாழும் பழைய மாணவர்கள் இணைந்து அனுப்பிய ரூபாய் 161731/= பணத்தில் மடிக்கணனி, அதிபர் மேசை கதிரை , அலுமாரி என்பன அவர்களுக்கு கல்வி புகட்டிய முன்னாள் ஆசிரியை திருமதி.சரோஜினிதேவி பாலசுந்தரம் அவர்களின் கையால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கபட்டது.
இதனை ஒழுங்கு செய்து, எமது சங்கத்தினூடு வழங்கிய அனைவருக்கும் எமது சங்கம் சார்பான நன்றிகள்!
எமது சங்கத்தின் உயர்த்தும் கரங்கள் செயற்குழுவினால், இளவாலை J/155 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கடும் மழை மற்றும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் வேண்டுகோளுக்கு இணங்க நுளம்பு வலை மற்றும் உலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது!
இதற்கான நிதியினொருபகுதியினை எமது சங்கத்தின் நீண்டநாள் நலன்விரும்பியான பொறியிலாளர் திரு தயந்தன் அவர்களும் மற்றும் தனுஷன் அவர்களும் வழங்கிவைத்தனர்! அவர்களுக்கு எமது சங்கம்சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்குழுவிற்கு றோயல் கல்லூரியின் 1982 A/L மாணவ நண்பர்கள் வழங்கிய 40,000/= நிதியி்ல் இருந்து யாழ் கல்லூண்டாய் பகுதியில் அமைந்த வீட்டுத்திட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தில் இடைத்தங்கலாக இடம்பெயர்ந்திருக்கும் குடும்பங்களில் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட 40 குடும்பங்களுக்கு நுளம்புவலைகள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது! தற்போது வெள்ள நிலமை ஓரளவு குறைந்துள்ள போதும் அடுத்து தேங்கிய நீர்களில் இருந்து நுளம்பு பெருக்கம் டெங்கு போன்ற அபாயநிலமைமைகளை கருத்தில் கொண்டே இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!
இதற்கான நிதியுதவியினை வழங்கிய றோயல்கல்லூரியின் 1982 A/L பழையமாணவர்களுக்கு எமது மகத்தான நன்றிகளை கூறுவதுடன், இந்த நிதி எமக்கு கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியர் வரகுணன் (IMHO கனடா) அவர்களுக்கும் எமது சங்கம் சார்பான நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறோம்!!!
COVID-19 தொற்று காரணமாக புரம்பெயர் தேசத்தில் உயிரிழந்த அமரர் உலகநாதன், மற்றும் அமரர் சிவானந்தன் ஆகியோர் வழங்கிய நிதி பங்களிப்பில் இன்றைய தினம் பலாலிவடக்கு பகுதியில் தனிமைபடுத்தபட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 60 பேருக்கான மதிய உணவு கிராமசேவையாளருக்கு ஒப்படைக்கபட்டு விநியோகிக்கப்பட்டதுடன் இளவாலை பகுதியில் தனிமைப்படுத்தபட்ட குடும்பம் ஒன்றிற்கும், மற்றும் காட்டு அந்தோனியார் கோவில் பகுதியை சேர்ந்த தேவையுடைய 15 குடும்பங்களுக்குமாக சமைத்த மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது!
இதற்கான நிதியைவழங்கிய அமரர்களின் குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவிப்பதுடன் அமரர் சிவானந்தன் அமரர் உலகநாதன் ஆகியோரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறோம்! இவர்களின் மூலமாக கடந்த COVID-19 தொற்று உயர் காலத்திலும் விசேட உணவுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது!
இன்றைய தினம்(19) பிறந்தநாளைக் கொண்டாடும் எமது சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போது UKல் வசித்துவருபவருமான சக்திக்குமரன் அவர்கள் கிளிநொச்சி நகரில் இருந்து வெகு தொலைவிலிருக்கும் கரியாலை நாகபடுவான் கிராமத்தைச்சேர்ந்த, பொருளாதார நலிவான குடும்பத்தில் வாழ்ந்துவரும் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கிவைத்தார்!
சங்க உறுப்பினர்கள் தமது பிறந்தநாளில் வீண் ஆடம்பர செலவுகளைக்குறைத்து இத்தகய செயற்திட்டங்களில் ஈடுபடவேண்டியது சங்க விதிமுறையாகும்!
அந்த வகையில் தனது பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக்கியிருக்கும் சங்க வாலிபன் சக்திக்குமரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.