எமது சங்கத்தினால் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் வரிசையில் இந்த ஆண்டும் மழைகாலமாகிய இத்தருணத்தில் மழைநீர்தேங்கி நிற்பதினூடு டெங்கு எனும் கொடிய நோய் பரவுவதற்கான அபாயநிலமையை கருத்தில் கொண்டு இளவாலை கிராமத்தை முழுமையாக உள்ளடக்கி மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு தயாராகி இருக்கிறோம்! இதற்கு கிராம மக்களின் பாரிய ஒத்துழைப்பினையும் எதிர்பார்த்துநிற்கின்றோம்! அந்த வகையில் எதிர் வரும் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இளவாலை மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகள், காணிகள் தோறும் இருக்கின்ற நீர்தேங்க கூடிய கழிவுப்பொருட்களான சிரட்டைகள், இளநீர்கோம்பைகள் பழைய டயர்கள், பிளாத்திக்கு பொருட்கள் தகரப்பேணிகள் என்பவற்றை சேகரித்து வீட்டுமுன்றல்களில் பொதி செய்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!(இதன் போது உக்ககூடிய பொருட்களை தனியேயும், உக்காத பொருட்களை வேறுபடுத்தி பொதிசெய்தும் வைக்கவும்)
எமது உறுப்பினர்கள் வலிவடக்கு பிரதேச சபையின் வாகனங்களினூடாக கிராமத்தவர்களின் வீடுகள்தோறும் சென்று குறித்த பொதிகளை சேகரித்து உரிய முறையில் அப்புறபடுத்துவதற்காக வலிவடக்கு பிரதேச சபையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்!
அன்றையதினம் கிராமத்திலுள்ள பொது இடங்களிலும் எமது உறுப்பினர்கள் நீர்தேங்க கூடிய பொருட்களை சேகரிக்கவுள்ளனர்!
எமது கிராமத்தில் இருந்து டெங்கு எனும் உயிர்கொல்லி அரக்கனை முழுமையாக ஒழிக்கும் எமது முயற்சிகளுக்கு கிராமத்தவர்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்கிறோம்! இது தொடர்பான அறிவித்தல்கள் கிராமத்தவர்களுக்கு நகரும் ஒலிபெருக்கி வாயிலாக நாளை அறிவிக்கப்படவுள்ளது!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.