எமது சங்கத்தின் உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு, கிளிநொச்சி மாவட்டம் செஞ்சோலை மாதிரி கிராமத்தில் சுமார் 20-25 குடும்பங்களுக்கு நீர் வசதியின்மை குறித்த கிடைத்த வேண்டுகோளின் பிரகாரம் ரூபா நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் செலவில் (450,000) நீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!
கடந்த ஆண்டு COVID-19 தொற்றினால் லண்டன் நகரில் உயரிழந்த அமரர் சுப்பிரமணியம் சிவானந்தன், மற்றும் சுப்பிரமணியம் உலகநாதன் ஆகியோரின் குடும்பத்தினர் வழங்கிய நிதி பங்களிப்பில் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!
சுமார் 25குடும்பங்களைச்சேர்ந்த 100 பேர் பயன்பெறக்கூடிய வகையில் குழாய்கிணறு அமைத்து, அதிலிருந்து மின்னியந்திர பம்பி மூலம் 5000L நீர்தாங்கிக்கு நீர் நிரப்பி குடிநீர் வசதியோடு, இதர தேவைகளை பூர்த்தி்செய்யும் வகையில் நீர் தொட்டி அமைத்தும், அதற்கான மறைப்பு சுற்றுவேலிகள் அமைத்தும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!
நிர்மாண பணிகளில்,ஆளணி செலவுகளை இயன்றளவு குறைக்க, எமது சங்க உறுப்பினர்கள் நீர்பம்பி,குழாய் பொருத்தும் பணிகளில் ஈடுபட்டதுடன், கட்டட நிர்மாண பணிகளுக்கு அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் குறைந்த செலவில் பணிபுரிந்தார்கள்!
அமரர் சு.சிவானந்தன் அவர்களின் 1வது நினைவு நாளான இன்றையதினம் (05-05-2021) இந்நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப் பட்டது!
இதற்கான நிதிபங்களிப்புக்களை வழங்கிய அமரர்களது குடும்பத்தினருக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு, அமரர் சு.சிவானந்தன் மற்றும் சு.உலகநாதன் ஆகியோரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறோம்!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.