எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்தின் கீழ் கணவனை பிரிந்து மிகவும் நலிவான குடும்ப பொருளாதார சூழலில் இரு பெண்பிள்ளைகளோடு வாழ்ந்துவரும் பெண் தலமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு எமது சங்கத்தால் ஏற்கனவே குழாய் கிணறு அடித்துக்கொடுக்கப்பட்ட நிலையில், அதில் நீர் பெற்றுக்கொள்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் இடர் நிலமையைக் கருத்தில் கொண்டு ரூபா 40,000/= செலவில் மின் மோட்டார் (கீழ் இருந்து நீர் இறைக்கும்) மற்றும் குழாய் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது!
இதற்கான நிதியினை யாழ்பாணம் மார்ட்டின் வீதியை சேர்ந்த அமரர் அல்பிரட் றிச்சட் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், யாழ்பாணம் மார்ட்டின் வீதியை சேர்ந்த பிரான்சில் வசித்த அவருடைய மனைவி அமரர் றிச்சட் பேபி சறோஜா அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டும் அவர்களது குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்!
அவர்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவிதுக்கொள்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.